பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
01:00
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான, ஐந்து மாதக் காலத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 2.78 சதவீதம் உயர்ந்து, 267.22 லட்சமாக அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 260 லட்சமாக இருந்தது என, உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையரகம் (டீ.ஜி.சி.ஏ.,) தெரிவித்துஉள்ளது.
சென்ற மே மாதத்தில், உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, 5.46 சதவீதம் அதிகரித்து, 60.22 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 57.10 லட்சமாக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில், இண்டிகோ நிறுவனம், 19.08 லட்சம் பயணிகளை ஏற்றி சென்று, தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டு உள்ளது. ஏர் – இந்தியா, 11.22 லட்சம் பயணிகளுடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட் லைட் நிறுவனங்கள் முறையே, 10.29 லட்சம் மற்றும் 2.32 லட்சம் பயணிகளை கையாண்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|