நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.32,193 கோடியாக வளர்ச்சிநவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.32,193 கோடியாக வளர்ச்சி ... கடந்த வாரத்தில் ஆபரண தங்கம்விலை சவரனுக்கு ரூ.472 கூடியது கடந்த வாரத்தில் ஆபரண தங்கம்விலை சவரனுக்கு ரூ.472 கூடியது ...
தமிழகத்தின் சிமென்ட் தேவை உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2014
00:50

மும்பை: நடப்பு நிதியாண்டில், தமிழகத்தின் சிமென்ட் தேவை, 4 – 5 சதவீதம் வளர்ச்சி காண வாய்ப்புள்ளதாக, கார்வி புரோக்கிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இதன் ஆய்வறிக்கை விவரம் வருமாறு:தமிழகத்தின், சிமென்ட் தேவை ஆண்டுக்கு, 2 கோடி டன் என்ற அளவில் உள்ளது.சென்ற நிதியாண்டில், தமிழகத்தின் சிமென்ட் தேவை, 4 சதவீதம் சரிவடைந்தது. இது, நடப்பு நிதியாண்டில், ரியல் எஸ்டேட் துறை எழுச்சி காணும்பட்சத்தில், 4 – 5 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திராவில், வலுவான அரசு அமைந்துள்ளதால், முடங்கியிருந்த மற்றும் புதிய கட்டுமான திட்டங்கள், முழு வீச்சில் செயல்பாட்டிற்கு வரும் என, தெரிகிறது
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், அம்மாநிலத்தில், சிமென்டிற்கான தேவை, 10 – 12 சதவீதம் அதிகரிக்கும். கடந்த நிதியாண்டில், இதற்கான தேவை, 6 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது.ஆந்திராவின் சிமென்ட் தேவை, ஆண்டுக்கு, 2.10 கோடி டன்னாக உள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் சிமென்ட் தேவை, ஆண்டுக்கு முறையே, 1.60 கோடி டன் மற்றும் 1 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் முறையே, 3 – 5 சதவீதம் மற்றும் 8 – 10 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மொத்தத்தில், நடப்பு நிதியாண்டில், தென் மாநிலங்களில், சிமென்டிற்கான தேவை, 5 – 7 சதவீதம் அதிகரிக்கும் என, தெரிகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)