பதிவு செய்த நாள்
22 ஜூன்2014
00:02
சென்னை ;கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 472 ரூபாய் உயர்ந்திருந்தது.ஈராக் போர் உள்ளிட்ட, சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில், உள்நாட்டில், தங்க ஆபரணங்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,668 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,344 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,530 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 18 ரூபாய் உயர்ந்து, 2,686 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 144 ரூபாய் அதிகரித்து, 21,488 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும், 10 கிராம் சுத்த தங்கம், 140 ரூபாய் உயர்ந்து, 28,670 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 48.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 45,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த திங்களன்று (16ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,627 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,016 ரூபாய்க்கும் விற்பனையானது. இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 59 ரூபாயும், சவரனுக்கு, 472 ரூபாயும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|