பதிவு செய்த நாள்
22 ஜூன்2014
00:06
புதுடில்லி:கரீப் பருவத்தில், இதுவரையிலுமாக, 7.59 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப் பட்டுள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறுவடைதென்மேற்கு பருவமழையை கணக்கிட்டு, கரீப் பருவ நடவுப் பணிகள், ஜூனில் துவங்கி, அக்டோபர் முதல் பயிர்கள் அறுவடை செய்யப்படும்.முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில், நாடு தழுவிய அளவில், கரீப் பருவ சாகுபடி பரப்பு இதுவரையிலுமாக, 95 லட்சம் ஹெக்டேரை தாண்டியுள்ளது.இதில், நெல் பயிரிடும் பரப்பு அதிகபட்சமாக, 7.59 லட்சம் ஹெக்டேராக உள்ளது.
இதையடுத்து, பருப்பு வகைகள், 2.60 லட்சம் ஹெக்டேரிலும், எண்ணெய்வித்துக்கள், 1.23 லட்சம் ஹெக்டேரிலும், உணவு தானியங்கள் 12.29 லட்சம் ஹெக்டேரிலும் பயிரிடப் பட்டுள்ளன.மேலும் வர்த்தக பயிர்களான, கரும்பு 43.92 லட்சம் ஹெக்டேரிலும், பருத்தி 20 லட்சம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன என, வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், பருவ மழை சராசரியைவிட குறைய வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.
மானியம்: இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற் கொள்ள வேண்டும் என,வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், மாநில அரசுகள், விவசாயிகளுக்கு, மானிய விலையில் டீசல், விதைகள் உள்ளிட்டவற்றை வழங்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|