பதிவு செய்த நாள்
22 ஜூன்2014
00:08
மும்பை :இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, சென்ற 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 5,700 கோடி ரூபாய் (95 கோடி டாலர்) அதிகரித்து, 18.81 லட்சம் கோடி ரூபாயாக (31,354 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 20 கோடி டாலர் உயர்ந்து, 31,259 கோடி டாலராக இருந்தது.மதிப்பீட்டு வாரத் தில், செலாவணி கையிருப்பில் அதிக பங்களிப்பை கொண்டுள்ள அன்னிய செலாவணி சொத்து மதிப்பு, 96 கோடி டாலர் உயர்ந்து, 28,658 கோடி டாலராக உள்ளது. அதே சமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு மாற்றம் எதுவுமின்றி, 2,079 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 55 லட்சம் டாலர் குறைந்து, 444 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 21 லட்சம் டாலர் சரிவடைந்து, 171 கோடி டாலராகவும் குறைந்துள்ளன என, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|