பதிவு செய்த நாள்
23 ஜூன்2014
00:44
ஐதராபாத்:வீடியோ விளையாட்டு துறையின் மொத்த வருவாய், அடுத்த மூன்று ஆண்டுகளில், 6 லட்சம் கோடி ரூபாயாக (10 ஆயிரம் கோடி டாலர்) உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில்,இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை,24 கோடியாக அதிகரித்துள்ளது.இதில்,12கோடி பேர் வீடியோ விளையாட்டுகளை ஆர்வத்துடன் ரசித்து, விளையாடி வருகின்றனர். இத்துடன், விறுவிறுப்பாக விற்பனையாகி வரும் ஸ்மார்ட் போன்களையும், வீடியோ விளையாட்டு களுக்காக, அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வீடியோ விளையாட்டுகளை உருவாக்கும் மென்பொருள் வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
வீடியோ விளையாட்டுகளில், பெண்களின் பங்களிப்பு, 2 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.எனவே, அவர்களின் விருப்பங்களை கண்டறிந்து, நிறுவனங்கள் அதற்கேற்றாற்போல், வீடியோ விளையாட்டுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன. இதுவும், விளையாட்டு மென்பொருள் வல்லுனர்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்யும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|