இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி குறையும்  உலக வங்கிஇந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி குறையும் உலக வங்கி ... சரிவில் முடிந்த ரூபாயின் மதிப்பு - ரூ.60.20 சரிவில் முடிந்த ரூபாயின் மதிப்பு - ரூ.60.20 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
விருப்ப பங்கு விற்பனை: புதிய விதிகள் அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
00:48

ஒரு நிறுவனத்தை தோற்று வித்த நிறுவனர்கள், தங்கள் பங்குகளை வெளிப்படையாக, பங்குச்சந்தையில் விற்பதற்கு, விருப்பத்தின் பேரில் பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் (ஆபர் பார் சேல் ஓ.எப்.எஸ்.,) உதவுகிறது.

பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கான இத்திட்டம், கடந்த 2012ம் ஆண்டு, ஜூலையில், நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம், நிறுவனர்கள், இதர வழிமுறைகளை விட, விரைவாக, குறைந்த செலவில் பங்குச் சந்தையில் தங்களிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்யலாம்.

அண்மையில், பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பு (செபி), இத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து, புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இதனால் யாருக்கு பயன்?:புதிய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் நிறுவனர்கள்மட்டுமின்றி, 10 சதவீதத்திற்கு மேல், அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளோரும், ஓ.எப்.எஸ்., மூலம் பங்குகளை விற்பனை செய்யலாம். மேலும், ஓ.எப்.எஸ்., வாயிலான பங்கு விற்பனையில், குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை, சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற அம்சமும் இடம் பெற்றுள்ளது. இது, இவ்வகை பங்கு விற்பனையில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும்.

சில்லரை முதலீட்டாளர்கள் யார் ?:பங்குகளில், 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்பவர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் இடம் பெறுவர்.
சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்தால்...?ஓ.எப்.எஸ்.,ல் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு, 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், எஞ்சிய பங்குகள் இதர முதலீட்டாளர் கள் பிரிவில் சேர்க்கப்படும்.

ஓ.எப்.எஸ்.,ல் சில்லரை முதலீட்டாளர்களுக்கு சலுகைகள் உள்ளதா?
'செபி' அவ்வப்போது அறிவிக்கும் விதிமுறைப்படி, பங்குகளை
விற்பனை செய்பவர், சில்லரை முதலீட்டாளர்களுக்கு சலுகைகள் வழங்கலாம். ஆனால், எந்த அளவிற்கு பங்கு விலையில் சலுகை வழங்கலாம்என்பது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முடிவிற்கு உட்பட்டது.

நிறுவனர்கள் சாராத பங்குதாரர்கள் யார்?:ஒரு நிறுவனத்தின் பங்குகளை,அந்நிறுவனத்தை உருவாக்கியவர்கள், நிதி நிறுவனங்கள், பங்கு முதலீட்டு நிறுவனங்கள் என, பல தரப்பினரும் வைத்திருப்பர். அவற்றில், 'செபி' அறிவித்துள்ள விதிமுறைப்படி, நிறுவனர்கள் சாராத, அதேசமயம் 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை வைத்துள்ளோர், ஓ.எப்.எஸ்.,ல் பங்கேற்கலாம்.

இதன் மூலம்,நிதி நிறுவனங்கள்,தனியார்பங்கு முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை, ஒரு நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்து விட்டு, வெளியேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது

எந்த நிறுவனங்கள் ஓ.எப்.எஸ்.,ல் இடம் பெற தகுதி உள்ளவை?:அதிக அளவில் சந்தை மூலதனத்தை கொண்ட, 200 முன்னணி நிறுவனங்களின் பங்கு முதலீட்டாளர்கள், ஓ.எப்.எஸ்., வாயிலாக பங்குகளை விற்பனை செய்யலாம். இதற்கு முன், 100 முன்னணி நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)