பதிவு செய்த நாள்
23 ஜூன்2014
12:34
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. ரயில்வேயில் நிலவி வரும் நிதிசிக்கலை தீர்க்க கடந்த வெள்ளியன்று ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளதாவது, உள்நாட்டு சர்க்கரை தொழிலை காக்க வரி உயர்வு அவசியம். அதனால், சர்க்கரைக்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கரும்பு ஆலைகளுக்கு கூடுதலாக ரூ.4,400 கோடி வட்டியில்லா கடன் வழங்க உள்ளது மத்திய அரசு. இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை உடன் செலுத்த இது உதவும். மேலும் ஒரு டன்னுக்கான ரூ.3,300 என்கிற சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம், செப்டம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|