பதிவு செய்த நாள்
28 ஜூன்2014
00:09
புதுடில்லி:வரும் 2015ம் ஆண்டில், இந்தியா – சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை, 10 ஆயிரம் கோடி டாலராக (6 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2011ம் ஆண்டில், இருநாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், 7,500 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த 2013ம் ஆண்டில், 6,545 கோடி டாலராக சரிவை கண்டுள்ளது.சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி, தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதேசமயம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது அதிகரித்து வருகிறது.இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக, சீனா உடனான வர்த்தக பற்றாக்குறை 3,500 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|