பதிவு செய்த நாள்
28 ஜூன்2014
00:16
புதுடில்லி:சர்வதேச அளவில், முந்திரி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் ஏற்றுமதி குறைந்து உள்ளது.சென்ற மே மாதத்தில், ஒரு கிலோ முந்திரியின் ஏற்றுமதி விலை, 434.86 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில்,397.42 ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், முந்திரி ஏற்றுமதி, 9,720 டன்னில் இருந்து 8,397 டன்னாகவும், அதன் மதிப்பு, 386.29 கோடியிலிருந்து, 365.17 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. நடப்பாண்டு, ஏப்., – மே மாதங்களில், முந்திரி ஏற்றுமதி, 15,715 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 19,904 டன்னாக இருந்தது.
இதே காலத்தில், முந்திரி ஏற்றுமதி மதிப்பு, 761.96 கோடியிலிருந்து, 683.39 கோடி ரூபாயாகசரிவடைந்து உள்ளது.விலை உயர்ந்துள்ள நிலையிலும், நாட்டின் முந்திரி கொட்டை இறக்குமதி அதிகரித்துள்ளது. சென்ற மே மாதத்தில், இறக்குமதிக்கான ஒரு கிலோ முந்திரி கொட்டை யின் விலை, 54.02லிருந்து 64.63 ரூபாயாக உயர்ந்தது.இந்நிலையிலும், இதன் இறக்குமதி, அளவின் அடிப்படையில், 75,660 டன்னிலிருந்து, 1,05,173 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 408.68 கோடியிலிருந்து, 679.78 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என, இந்திய முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|