பதிவு செய்த நாள்
28 ஜூன்2014
00:18
மும்பை:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், இந்திய விமான சேவை நிறுவனங்களின் ஒட்டு மொத்த இழப்பு, 140 கோடி டாலராக (8,400 கோடி ரூபாய்) உயரும் என, ஆசிய பசிபிக் விமான மையம் (காபா) அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:எரிபொருள் மற்றும் விமான நிலைய கட்டண அதிகரிப்பால், இந்திய விமான சேவை நிறுவனங்கள், சென்ற 2013 – 14ம் நிதியாண்டில் மட்டும், 177 கோடி டாலர் அளவிலான இழப்பை சந்தித்துள்ளன.குறிப்பாக, விமான சேவையில், இரண்டாவது இடத்தில் உள்ள ஜெர் ஏர்வேஸ், தொடர்ந்து ஏழாவது முறையாக, சென்ற நிதியாண்டில், 3,667 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பை (485 கோடி ரூபாய்) காட்டிலும், 7 மடங்கிற்கும் அதிகமாகும்.கடந்த ஏழு ஆண்டுகளில், இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த இழப்பு, 1,060 கோடி டாலரை எட்டியுள்ளது.இந்நிலையில், புதிய நிறுவனங்களின் வரவால் ஏற்பட்டுள்ள கடும் போட்டி, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கட்டண சலுகை காலம் நீட்டிப்பு போன்றவை, விமான சேவை நிறுவனங்களின் நிதி செயல்பாடுகளை மேலும் மோசமாக்குவதாக உள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், விமான சேவை நிறுவனங்களின் இழப்பு, 140 கோடி டாலரை எட்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|