பதிவு செய்த நாள்
28 ஜூன்2014
00:24
புதுடில்லி:ஆன்–லைன் மூலம், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வாங்கும் வசதி, விரைவில், அறிமுகமாக உள்ளது.
இதன் மூலம், பாலிசிகளுக்கான பிரிமியம் செலுத்துவது, பாலிசிகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பிற சேவைகளையும், காப்பீட்டுதாரர்கள் பெறலாம்.அஞ்சலக ஊழியர்களின் நலனுக்காக, கடந்த, 1884ம் ஆண்டு, பிப்ரவரி 1ம் தேதி, அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் துவங்கப்பட்டது. பின், இத்திட்டம், தந்தி ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர், தேசிய வங்கி அலுவலர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர், அஞ்சலக ஆயுள் காப்பீடு வசதியை பெறலாம்.கிராம மக்களுக்கும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு வசதி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், கடந்த, 1995ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் துவங்கப்பட்டது.
இதில், கிராமத்தினர், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வாங்கலாம். விரைவில், இப்பிரிவிலும், ஆன்–லைன் மூலம், பாலிசிகளை வாங்கும் வசதி அறிமுகமாக உள்ளது.
ஆன்–லைன் காப்பீட்டு சேவைக்காக, தற்போது, 812 தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில், கணினி ஒருங்கிணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேற்கண்ட, இரு அமைப்புகளின் கீழ், 2.80 கோடி காப்பீட்டுதாரர்களின், 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|