பதிவு செய்த நாள்
30 ஜூன்2014
02:10
புதுடில்லி:நவீன தொழில்நுட்பத்தில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்க வேண்டும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பு, மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கிடம் அளித்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் சராசரி எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில், கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை, இந்தியா கொண்டுள்ளது.
எண்ணெய் வித்துக்கள், பருப்பு, சோளம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், தொழில்நுட்ப செயல்திட்டத்திற்கு புத்துயிர் அளித்து, வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னர், இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, சிறப்பான கொள்கைகளால், 1992–93ம் ஆண்டில், இந்தியா, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில், 97 சதவீதம் தன்னிறைவைக் கண்டது.
ஆனால்,கடந்த சில ஆண்டுகளாக, தொழில்நுட்ப செயல்திட்டத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. சமையல் எண்ணெய் துறைக்கு கொள்கை முடிவுகளை அறிவிக்க, உயர் அமைப்பு இல்லாத நிலை உள்ளது.மரபணு மாற்ற சோயாவின் அறிமுகத்திற்கான சாத்தியக் கூறுகளை,அரசு ஆராய்ந்து செயல்படுத்தினால், அதன் மகசூல் அதிகரிக்கும்.
தேவைக்கேற்ப, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் உற்பத்தி இல்லாததால், அவை,ஆண்டுக்கு,முறையே, 1 கோடி டன் மற்றும் 30 லட்சம் டன் என்ற அளவிற்கு இறக்குமதிசெய்யப்படுகின்றன.
தற்போது,எண்ணெய் வித்துக்களின் தேவையில், 55 சதவீதம்,இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப் படுகிறது.இதை,15–20 சதவீதமாக குறைக்க விரும்பினால், தொழில்நுட்ப செயல் திட்டத்திற்கு புத்துயிர் அளிப்பது அவசியம்.
மேலும், மலேசியாவில் உள்ளது போன்று, எண்ணெய் வித்துக்கள், பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியில் கவனம் செலுத்த,தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|