பதிவு செய்த நாள்
30 ஜூன்2014
02:12
புதுடில்லி:பொலிவிழந்த பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் துறை, மீண்டும் பிரகாசமாக மின்னுவதற்கு, மத்திய பட்ஜெட்டில் சலுகைகளை எதிர்நோக்கியுள்ளது.
ஏப்ரல்– மே மாதங்களில், பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி,8 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 54.10 லட்சம் காரட்டாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 59 லட்சம் காரட்டாக இருந்தது.
வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகும் மத்திய பட்ஜெட்டில், வைரங்கள் பட்டை தீட்டும் தொழிலை ஊக்குவிக்கும் சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, இத்துறை சார்ந்த நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன.'இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில், வைரங்களுக்கான தேவை சூடுபிடிக்க வாய்ப்புள்ளது' என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மேம்பாட்டு குழு தலைவர் விபுல் ஷா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|