பதிவு செய்த நாள்
30 ஜூன்2014
10:46
புதுடில்லி : வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் டில்லி, இந்தூர், சண்டிகர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் மொத்த விலை சந்தையை விட, சில்லரை விலை சந்தையில் வெங்காயத்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. டில்லியில் மொத்த விலை சந்தையில் ரூ.12.75க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, சில்லரை விலை சந்தையில் ரூ.24 க்கு விற்பனையாகிறது. இந்த இரண்ட மடங்கு விலை வித்தியாசத்தால் சாமானிய மக்கள் பாதிப்பையும், இடைத்தரகர்கள் பெரும் லாபத்தையும் எதிர்கொள்கிறார்கள்.
பெங்களூரு, விசாகப்பட்டினம், சென்னை, இந்தூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் மே 27 முதல் ஜூன் 27 வரை வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ.12 வரை அதிகரித்துள்ளது. இந்த செயற்கையான விலை ஏற்றத்தை தடுப்பதற்கு தேவையான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியில் அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பருவமழையின் அளவு சராசரியை விட குறைந்துள்ளதால் வெங்காயம், உருளைக்கிழங்கு, பால், பருப்பு வகைகள், பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் உள்ளிட்ட 22 அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் இந்த வாரம் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் உணவு பொருட்களின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
சில்லரை விற்பனையில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் ஜூலை மாதத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|