பதிவு செய்த நாள்
30 ஜூன்2014
17:07
மும்பை : கடந்த வாரங்களில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பங்குசந்தைகள் சரிந்து இருந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று(ஜூன் 30ம் தேதி) பங்குசந்தைகள் எழுச்சி கண்டன. குறிப்பாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் பங்குசந்தைகளில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 313.86 புள்ளிகள் உயர்ந்து 25,413.78-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 102.55 புள்ளிகள் உயர்ந்து 7,611.35-ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 8 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் பிபிசிஎல்., 5 சதவீதமும், எச்பிசிஎல்., 4.7 சதவீதமும், ஐஓசி., 3.7 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|