முக்கிய எட்டு துறைகள் உற்பத்திவளர்ச்சி 2.3 சதவீதமாக குறைந்ததுமுக்கிய எட்டு துறைகள் உற்பத்திவளர்ச்சி 2.3 சதவீதமாக குறைந்தது ... தமிழகத்தில் 11 எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணி : ரூ.800 கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் திட்டம் தமிழகத்தில் 11 எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணி : ரூ.800 கோடி முதலீடு செய்ய ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொது காப்பீட்டு வர்த்தகத்தில்தனியார் வளர்ச்சி; பொது துறை தளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2014
07:17

மும்பை: பொது காப்பீட்டு சந்தையில், தனியார் துறையின் பங்களிப்பு, சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதே சமயம், பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.கடந்த, 2013–14ம் நிதியாண்டில், பொது காப்பீட்டு சந்தையில், பிரிமியம் வருவாய் அடிப்படையில், தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு, முந்தைய நிதியாண்டை விட, 2.33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 42.77 சதவீதத்தில் இருந்து, 44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், பொது துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 1.18 சதவீதம் சரிவைக் கண்டு, 57.04 சதவீதத்தில் இருந்து, 55.84 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. தனியார் துறையில், பஜாஜ் அலையன்ஸ், எச்.டீ.எப் .சி எர்கோ, எஸ்.பீ.ஐ ஜெனரல், ரிலையன்ஸ் ஜெனரல், பார்தி அக்ஸா ஆகிய நிறுவனங்களின், சந்தை பங்களிப்பு அதிகரித்துள்ளது. அதே சமயம், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு
நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 8.88 சதவீதத்தில் இருந்து, 8.84 சதவீதமாக குறைந்துள்ளது.ராயல் சுந்தரம், டாட்டா ஏ.ஐ.ஜி., யுனிவர்சல் சோம்போ மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பும், மதிப்பீட்டு காலத்தில் சரிவடைந்து உள்ளது.எனினும், பொருளாதார மந்தநிலையிலும், ஒட்டுமொத்த அளவில், பொதுத் துறையை விட, தனியார் துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)