பதிவு செய்த நாள்
01 ஜூலை2014
07:17
மும்பை: பொது காப்பீட்டு சந்தையில், தனியார் துறையின் பங்களிப்பு, சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதே சமயம், பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.கடந்த, 2013–14ம் நிதியாண்டில், பொது காப்பீட்டு சந்தையில், பிரிமியம் வருவாய் அடிப்படையில், தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு, முந்தைய நிதியாண்டை விட, 2.33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 42.77 சதவீதத்தில் இருந்து, 44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், பொது துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 1.18 சதவீதம் சரிவைக் கண்டு, 57.04 சதவீதத்தில் இருந்து, 55.84 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. தனியார் துறையில், பஜாஜ் அலையன்ஸ், எச்.டீ.எப் .சி எர்கோ, எஸ்.பீ.ஐ ஜெனரல், ரிலையன்ஸ் ஜெனரல், பார்தி அக்ஸா ஆகிய நிறுவனங்களின், சந்தை பங்களிப்பு அதிகரித்துள்ளது. அதே சமயம், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு
நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 8.88 சதவீதத்தில் இருந்து, 8.84 சதவீதமாக குறைந்துள்ளது.ராயல் சுந்தரம், டாட்டா ஏ.ஐ.ஜி., யுனிவர்சல் சோம்போ மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பும், மதிப்பீட்டு காலத்தில் சரிவடைந்து உள்ளது.எனினும், பொருளாதார மந்தநிலையிலும், ஒட்டுமொத்த அளவில், பொதுத் துறையை விட, தனியார் துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|