பதிவு செய்த நாள்
01 ஜூலை2014
07:19
தமிழகத்தில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் குறித்து ஆராய, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 11 எண்ணெய் கிணறு பகுதிகளில், துரப்பண பணி மேற்கொள்ள உள்ளது. 800 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில், கூட்டு நிறுவனமான, பிரிட்டிஷ் பெட்ரோலியம் (பீ.பி.,), 240 கோடி ரூபாய் முதலீடு செய்யும்.
பங்கு மூலதனம்:புதுச்சேரி – காரைக்கால் இடையே, தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து, 22 கி.மீ., துாரத்தில், 10,655 ச.கி.மீ., பரப்பிலான ஆழ்கடல் பகுதிக்குள், துரப்பண பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.கடந்த, 2011ம் ஆண்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 21 எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுப்புகளில், துரப்பண பணி மேற்கொள்ளும் திட்டத்தில், 30 சதவீத பங்கு மூலதனத்துடன் பீ.பி., இணைந்தது. இத்திட்டத்தின் மொத்த முதலீடு, 720 கோடி டாலராகும் (43,200 கோடி ரூபாய்).இதுவரை, ஆய்வு மேற்கொண்டவற்றுள், எதிர்பார்த்த எண்ணெய் வளம் இல்லாததால், 15 தொகுப்புகளின், பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், கடந்த, 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில், எரிவாயு வளம் உள்ளதை இந்நிறுவனங்கள் கண்டுபிடித்தன. இதையடுத்து, அப்பகுதியில், 11 கிணறுகளில், துரப்பண பணி மேற்கொள்ள, சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்தது.
இதுவரை, துரப்பணப் பணி நடைபெற்ற எட்டு கிணறுகளில், இரண்டு கிணறுகளில், எண்ணெய் வளம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன், மேலும், எட்டு கிணறுகளில், ஆய்வு மேற்கொண்டு, எண்ணெய் வள ஆதாரம் மற்றும் வர்த்தக சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
துரப்பண பணிகள், வரும், 2015ம் ஆண்டு ஜனவரியில் துவங்கும். 100 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும், ஒவ்வொரு கிணற்றின் ஆய்வுப் பணியும், 3 – 4 மாதங்களில் முடிவடையும். இதில், எண்ணெய் வளம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால், அவற்றின் உற்பத்தி நடவடிக்கைககள் துவங்கும்.
கண்டுபிடிப்பு:கடந்த, 2012 – 13ம் நிதியாண்டு நிலவரப்படி, உள்நாட்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு, தினமும், 43.50 லட்சம் பீப்பாய் என்ற அளவிற்கு உள்ளது. அதே சமயம், இதன் உற்பத்தி, 7.5 லட்சம் பீப்பாய் என்ற அளவிற்கே உள்ளது.உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதிகரிக்கவில்லை. புதிய எண்ணெய் கிணறுகளை கண்டுபிடிக்காத வரை, வரும் ஆண்டுகளில், உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காது என, ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|