பதிவு செய்த நாள்
01 ஜூலை2014
16:53
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. ஜூன் மாதத்தில் அநேக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை அதிகரித்தது, அதனால் அதுதொடர்பான பங்குகள் விலை உயர்ந்தது போன்ற காரணங்களாலும், முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கியதாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 102.57 புள்ளிகள் உயர்ந்து 25,516.35-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 23.35 புள்ளிகள் உயர்ந்து 7,634.70-ஆகவும் முடிந்தன.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மொபைல் நிறுவன பங்குகளான மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் நன்கு உயர்வுடன் காணப்பட்டன. இவைகள் தவிர்த்து ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளும் ஏற்றத்துடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|