பதிவு செய்த நாள்
04 ஜூலை2014
00:09
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 9 சதவீதம் (80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்து, 9.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எச்.டி.எப்.சி.,:இது, கடந்த நிதிஆண்டின் இதே காலாண்டில், 9.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. சென்ற மே மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சாதனை அளவாக, 10.11 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருந்தது.
கணக்கீட்டு காலாண்டில், முதலிடத்தில் உள்ள எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, 15 சதவீதம் உயர்ந்து,1.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 10.52 சதவீதம் உயர்ந்து, 1.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் எம்.எப்., (1.12 லட்சம் கோடி ரூபாய்), பிர்லா சன்லைப் (98,556 கோடி) மற்றும் யு.டி.ஐ., எம்.எப்., (79,411 கோடி) ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.மதிப்பீட்டு காலாண்டில், முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு மட்டும், 68 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கூட்டமைப்பு;இதற்கிடையே, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அடுத்த 4–5 ஆண்டுகளில், 20 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, பரஸ்பர நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (ஆம்பி) தலைவர் சந்தீப் சிகா தெரிவித்துள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|