பதிவு செய்த நாள்
04 ஜூலை2014
00:14
புதுடில்லி:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, தற்போது, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ஏற்படும் வருவாய் இழப்பு, 3.40 ரூபாயாக உயர்ந்துள்ளது.
போர்:ஈராக் உள்நாட்டு போரால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.இதனால், மாதந்தோறும் டீசல் விலையை லிட்டருக்கு, 50 காசு உயர்த்தி வரும் நிலையிலும், எண்ணெய் நிறுவனங்களின் டீசல் சார்ந்த வருவாய் இழப்பு, 1.62 ரூபாயிலிருந்து, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.எண்ணெய் நிறுவனங்களுக்கு, தற்போது, பொது வினியோக திட்டத்திற்கான ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில், 33.07 ரூபாயும், சமையல் எரிவாயு விற்பனையில், 449.17 ரூபாயும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து, மேற்கண்டவற்றின் விற்பனை வாயிலாக, தற்போது, எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, 271 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முன்பு, 249 கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பீடு:நடப்பு நிதியாண்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஏற்படும் வருவாய் இழப்பு, 91,665 கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டில், 1,39,869 கோடியாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|