தங்கம் விலை ரூ.16 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.16 உயர்ந்தது ... பூச்சி தாக்­கு­தலால் அர­பிகா காபி பயிர் பாதிப்பு:உற்­பத்­தியில் இது­வரை இல்­லாத வீழ்ச்சி பூச்சி தாக்­கு­தலால் அர­பிகா காபி பயிர் பாதிப்பு:உற்­பத்­தியில் இது­வரை ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இருசக்கர வாகனச்சந்தையில் புரட்சி - மஹிந்திராவின் வெற்றி!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
13:39

மஹிந்திராவின் இருசக்க வாகனப்பிரிவான மஹிந்திரா டூவீலர்ஸ் இந்தியா லிமிடெட், இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பரபரப்பான விற்பனை சாதனைகளை புரிந்து வருவது தெரிந்ததே. ஸ்கூட்டர் பிரிவில், பல மாடல்களை வெளியிட்டு வெற்றி பெற்ற இந்நிறுவனம், செஞ்சுரோ மூலம் மோட்டார் சைக்கிள் பிரிவில், புரட்சிகரமான விற்பனையை எட்டியுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் இருசக்கர வாகன வளர்ச்சி பற்றியும், செஞ்சுரோவின் வெற்றியை பற்றியும் மஹிந்திரா டூவிலர்ஸ் இந்தியா லிமிடெட்டின் முதன்மை செயல் அலுவலர் கூறியது பின்வருமாறு:
இந்திய வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் ரசனைக்கேற்ப ஸ்கூட்டர் பிரிவில், பல வெற்றி மாடல்களை கொடுத்த நாங்கள், செஞ்சுரோ மூலம் மோட்டார் சைக்கிள் பிரிவில் காலடி எடுத்து வைத்தோம். வரலாறு காணாத வெற்றியை, செஞ்சுரோவின் அபாரமான விற்பனை சாத்தியமாக்கியுள்ளது. செஞ்சுரோவின் வெற்றிக்கு காரணங்கள் பல. இதில் முக்கிய காரணம். இதுவரை மோட்டார் சைக்கிள்களில் அவற்றின் செயல்திறனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், செஞ்சுரோவில் புதுமையான சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளதாகும். இதுவரை கார்களில் மட்டுமே நாம் அனுபவித்து வந்த பல அம்சங்கள் செஞ்சுரோவில் உள்ளதால், இருசக்கர வாடிக்கையாளர்கள் இதனால், பெரிதும் கவரப்பட்டுள்ளனர்.
செஞ்சுரோவில் வண்டி திருடப்படுவதை தவிர்க்கும் ஆன்டி தெப்ட் அலார்ம் வித் இன்ஜின் இம்மொபலைசர், ரிமோட் ப்லிப் கீ (சாவி) இருட்டில் வண்டி எங்கே இருக்கிறது என்பதை அறிய உதவும், பைன்ட் மீ லாம்ப் மற்றும் கைட் லாம்ப் போன்ற வசதி அம்சங்கள் இதில் உள்ளது. இதைத் தவிர எரிபொருள் அளவு, சர்வீஸ் செய்ய வேண்டிய நேரம் மற்றும் எரிபொருள் சிக்கனம் கொடுக்கக்கூடிய ஓட்டும் முறைப் பற்றி தகவல் போன்றவைகளை தெரிவிக்கும் டிஜிட்டல் டேஷ்போர்ட் செஞ்சுரோவின் மற்றொருசிறப்பம்சமாகும்.
சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமின்றி, 8.5 பிஎச்பி சக்தியும், 8.5 என்எம் இழுவிசையும் அளிக்கும் எம்சி5 இன்ஜின் சாதுர்யமாக இயங்கி, அதிக செயல்திறனையும், எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது. இந்தியாவின் முக்கியமான, 7 விருதுகளை சிறந்த மோட்டார் சைக்கிளுக்காக பெற்றுள்ளது செஞ்சுரோ என்று பெருமையுடன் தெரிவித்த அவர், தங்களின் விற்பனைக்கு பின்பான சேவைகள் பற்றி கூறியது கீழ்வருமாறு. தென்னிந்தியாவில், மஹிந்திரா இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதை, கருத்தில் கொண்டு, 500க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை மையங்களை அமைக்க உள்ளோம். தமிழகத்தில், 31வது விற்பனை நிலையத்துடன் சேர்ந்த பணிமனை, 6,135 சதுரடியில் கடந்த வாரம் சென்னை அரும்பாக்கத்தில், ‘212 டிகிரி பைக்ஸ்’ என்ற பெயரில் துவக்கி உள்ளோம்.
விற்பனைக்கு பின், சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் என்றுமே, மஹிந்திரா தவறியதில்லை. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு புதுமையான, சிறப்பான அம்சங்களை, இருசக்கர வாகனப்பிரிவில் தொடர்ந்து வழங்குவோம் என்று, கூறி முடித்தார் மஹிந்திராவின் முதன்மை செயலர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)