பதிவு செய்த நாள்
04 ஜூலை2014
17:26
மும்பை : பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. பங்குசந்தைகளில், வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 4ம் தேதி) சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை தொட்டன. பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்திருந்தது அதன்காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியது, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை ஏற்றம் கண்டது, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது போன்ற காரணங்களும் பங்குசந்தைகள் உயர காரணமாகின.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 138.31 புள்ளிகள் உயர்ந்து 25,962.06-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 36.80 புள்ளிகள் உயர்ந்து 7,751.60-ஆகவும் முடிந்து புதிய உச்சத்தை தொட்டன. மேலும் சென்செக்ஸ் 26 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி கொண்டிருக்கிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் விலை ஏற்றம் கண்டும், 11 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|