பதிவு செய்த நாள்
06 ஜூலை2014
00:39
நெய்வேலி:நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.,), அடுத்த ஐந்து மாதங்களில், கூடுதலாக, 1,500 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் என, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பீ.சுரேந்தர் மோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:நெய்வேலி மற்றும் துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 1,500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நான்கு புதிய பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், அடுத்த ஐந்து மாதங்களில், மின் உற்பத்தி துவங்கும்.நெய்வேலி, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், 3,027 கோடி ரூபாய் செலவில், தலா 250 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரு பிரிவுகளின் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
இவை தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் இணைந்து, 4,910 கோடி ரூபாய் செலவில், தலா, 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு பிரிவுகளும், அடுத்த ஐந்து மாதங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.ஆக, அடுத்த ஐந்து மாதங்களுக்குள் கூடுதலாக, 1,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தற்போது, என்.எல்.சி.,யின் மின் உற்பத்தி திறன் 2,490 மெகாவாட்டாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|