பதிவு செய்த நாள்
06 ஜூலை2014
12:52
தாண்டிக்குடி :தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுக்காக வளர்க்கப்பட்ட 'வாட்டர்' ஆப்பிள் காய்த்து குலுங்குகிறது.திண்டுக்கல் மாவட்டம் தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வுக்காக வளர்க்கப்பட்ட வாட்டர் ஆப்பிள் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நன்கு காய்த்துள்ளது. நடவு செய்யப்பட்ட
3 ஆண்டுகளிலிருந்து காய்க்க தொடங்கி 40 ஆண்டுகள் வரை பலனளிக்கும்.
ஆண்டுக்கு இருமுறை காய்க்கும் தன்மை கொண்டது. கால்சியம், விட்டமின்- சி, இரும்பு சத்து நிறைந்துள்ளது. நீர் சத்து அதிகமுள்ள இப்பழத்திலிருந்து ஜூஸ், ஜெல்லி, ஜாம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. கர்நாடகா, கேரளா பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தற்போது, மார்க்கெட்டில் கிலோ ரூ.40 வரை விலை கிடைக்கிறது. இப்பழத்தில் புளிப்புடன் இனிப்பும் சேர்ந்துள்ளது. பெரும்பாறை, புல்லாவெளி பகுதியில் விவசாயிகள் மலைத்தோட்ட பயிர்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நடவு செய்து மகசூல் ஈட்டி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|