தடியன்குடிசையில் கிடைக்குது சத்தான 'வாட்டர்' ஆப்பிள்தடியன்குடிசையில் கிடைக்குது சத்தான 'வாட்டர்' ஆப்பிள் ... திரவ வடிவில் உயிர் உரம் விரைவில் அறிமுகம் திரவ வடிவில் உயிர் உரம் விரைவில் அறிமுகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேவையைத் தாண்டி செயல்படும் வங்கிகள் : அதிகரிக்கும் வராக் கடன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2014
13:13

மதுரை: சேவையைத் தாண்டி, வணிகத்தை நோக்கி செயல்படும் சில பொதுத்துறை வங்கிகளால், வராக்கடன்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.பத்தாண்டுகளுக்கு முன் வரை, வங்கிகள் என்றாலே வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெறுவது, கடன் வழங்குவது, அவற்றை வசூலிப்பது என்ற நிலை தான் இருந்தது. தற்போது டெபாசிட் வசூலிப்பதும், கடன் வழங்குவதும் நடைபெறுகிறது. ஆனால் கடனை வசூலிப்பது என்ற இலக்கிலிருந்து, சில வங்கிகள் நீர்த்துப் போய்விட்டன. விளைவு தான், வராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன.இதுகுறித்து வங்கியாளர்கள் கூறியதாவது:ஒரு சில வங்கிகள், உண்மையான வராக்கடன்களின்
அளவையும் குறிப்பிடுவதில்லை. வாடிக்கையாளர் வாங்கிய கடனுக்கான அசல், வட்டியைதொடர்ந்து மூன்று மாதங்கள் செலுத்தாவிட்டால், வராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும். அவற்றை வசூலிப்பதற்கான முயற்சியில் வங்கிகள் ஈடுபட வேண்டும். ஆனால் நடப்பதோ வேறுமாதிரி இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு மேலான கடன்களை, நடப்பில் இருப்பது போல மாற்றிக் கொள்கின்றனர். இதனால், வங்கிக் கணக்கிலும் நடப்பு கடன் போலவே காட்டப்படுகிறது. வராக்கடனில் வருவதில்லை.
இதற்கு காரணம், கொடுத்த கடனை திருப்பி வசூலிப்பதில், வங்கியாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சில வங்கிகள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து
'இன்சூரன்ஸ், இன்வெஸ்ட்மென்ட்' திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதற்கு தனியாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கடன் வசூலாகாத வாடிக்கையாளர்களிடம், குறைந்தபட்ச இன்சூரன்ஸ் தொகை பெற்று, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
வங்கிக் கிளை மேலாளர்களுக்கு, இலக்கு நிர்ணயிப்பதால், கடன் வசூல் என்பதை மறந்து, இன்சூரன்ஸ் இலக்கை நோக்கிச் செல்கின்றனர். இதனால் தான் வராக்கடன்களின் அளவும் அதிகரித்து வருகிறது.வங்கிகள் லாபத்தில் தான் இயங்குகின்றன. வங்கியாளர்களுக்கும் நல்ல சம்பளம் தரப்படுகிறது. இவ்வளவையும் தாண்டி, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தரும் சொற்பத்தொகைக்காக, கடன்களை வசூல் செய்யாமல் இருப்பது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என வங்கியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.ரிசர்வ் வங்கி இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும். இதற்கு முந்தைய மத்திய அரசின் தவறான கொள்கையை, மோடி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதன்மூலமே வராக்கடன்களின் சதவீதத்தை குறைக்க முடியும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)