பதிவு செய்த நாள்
06 ஜூலை2014
13:52
சின்னமனூர்:வேளாண்மைத்துறை மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இணைந்து நடத்திய உரப்பயன்பாடு குறித்த விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் சின்னமனூரில் நடந்தது. வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஜெயபாண்டியன் பேசியதாவது:ஏற்கனவே திட வடிவில் பயன்பாட்டில் இருக்கும் உயிர் உரங்கள் விரைவில் திரவ வடிவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. திட உரத்தில் கலக்கப்படும் 'லிக்னைட்' பவுடருக்கு பதில், வளர்ப்புத் திறனை சேர்த்து திரவ உரம் தயாரிக்கப்படும். இந்த உரம் பராமரிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிது.
உயிர் உர எண்ணிக்கையை அதிகப்படுத்தி பராமரித்து, குறிப்பிட்ட காலம் வரை தாங்கும் விதத்தில் தயாராகும். தற்போது விவசாயிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சொட்டு நீர் பாசனத்தில், இந்த திரவ உயிர் உரங்களை சரியான அளவிலும், நீரில் எளிதில் கரைத்து கொடுக்க முடியும். இன்னும் 5 மாதத்தில் இந்த திரவ உரம் பயன்பாட்டிற்கு வரும். என்றார்.
முகாமில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகளின் மழைநீர் சேகரிப்பு குறித்த செயல்விளக்கமும், கிராமப்புற பாடல் வடிவத்தில் விளக்க நிகழ்ச்சியும் நடந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|