பதிவு செய்த நாள்
07 ஜூலை2014
00:28
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற ஜூன் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 5,142 கோடி ரூபாய் (85.70 கோடி டாலர்) அதிகரித்து, 18.94 லட்சம் கோடி ரூபாயாக (31,577 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 85.10 கோடி டாலர் உயர்ந்து, 28,900 கோடி டாலராக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில். எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதி யத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு முறையே, 40 லட்சம் டாலர் மற்றும் 17 லட்சம் டாலர் அதிகரித்துள்ளது.
அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,080 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில், டாலர் வரத்து அதிகரித்து வருவதைஅடுத்து, அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த சில வாரங்களாக சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|