அன்னிய செலாவணி கையிருப்புரூ.18.94 லட்சம் கோடியாக உயர்வுஅன்னிய செலாவணி கையிருப்புரூ.18.94 லட்சம் கோடியாக உயர்வு ... அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது ...
வருமான வரி கணக்கு படிவத்தில் புதிய விதிமுறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
00:29

புதுடில்லி:வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்தில், மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை குறிப்பிடும், புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்:இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:வருமான வரி துறையின் வலைத்தளம் வாயிலாக, மின்னணு முறையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், தங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
இதற்காக, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில், புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வருமான வரி அதிகாரிகள், நேரடியாக, வரி செலுத்துவோரிடம் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.வரி செலுத்துவோர் முகவரி மற்றும் மொபைல் போன் எண் மாற்றம் குறித்த தகவலையும், புதுப்பிக்க வேண்டும்.குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டு வர்த்தகம் புரிவோர், பொதுவாக, ஒரே மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை அளிக்கலாம்.
இதன்படி, அதிகபட்சமாக, 10 பேர், ஒரு மின்னஞ்சல் மற்றும் ஒரு மொபைல் எண்ணை வருமான வரித் துறைக்கு அளிக்கலாம். வரி செலுத்துவோர், கூடுதலாக தங்களுக்கு தெரிந்த ஒருவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல்போன் எண்ணை வழங்குவதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு:வரி செலுத்துவோரை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில், இந்த இரண்டாவது மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
வருமான வரி துறையின் வலைத்தளத்தில் இருந்து வரும் மின்னஞ்சல் தகவல்களை, 'பாதுகாப்பு பட்டியல்' பிரிவில் சேர்க்கும் வகையில் அமைத்துக் கொண்டால், மின்னஞ்சல்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீர்வு:கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை, சம்பந்தப் பட்டவருக்கு திரும்ப வழங்குவதில் பல்வேறு பிரச்னைகளை, வருமான வரித்துறை சந்தித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதத்தில், வழக்கமான வருமான வரி தாக்கல் படிவம் மற்றும் வலைத்தளப் படிவம் ஆகியவற்றில், மேற்கண்ட புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக, வருமான வரிதுறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)