வருமான வரி கணக்கு படிவத்தில் புதிய விதிமுறைவருமான வரி கணக்கு படிவத்தில் புதிய விதிமுறை ... அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது ...
சர்வதேச ஐ.டி., செலவினம்ரூ.222 லட்சம் கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
00:33

புதுடில்லி:சர்வதேச நாடுகளின், தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்கான செலவினம், நடப்பாண்டில், 2.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.70 லட்சம் கோடி டாலராக(222 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இது, முந்தைய மதிப்பீட்டில், 3.2 சதவீதம் வளர்ச்சி காணும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. கடும் போட்டியால் ஏற்படும் விலை இறக்கம், சந்தையில் அதிகளவில் மாற்று தொழில்நுட்ப தயாரிப்புகள் கிடைப்பது போன்றவற்றால், நிறுவனங்களின் ஐ.டி., செலவினம் கணிசமாக குறையும்.
இருப்பினும், வரும் 2015ம் ஆண்டில், சர்வதேச ஐ.டி., செலவினம், 3.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.88 லட்சம் கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பாண்டில், ஒட்டு மொத்த ஐ.டி., செலவினத் தில், கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்லெட், பிரின்டர் உள்ளிட்ட சாதனங்களுக்காக செலவிடப்படும் தொகை, 1.2 சதவீதம் உயர்ந்து, 68,500 கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தரவு மையங்கள் (14 ஆயிரம் கோடி டாலர்) மற்றும் மென்பொருள் (32,100 கோடி டாலர்) ஆகியவற்றிற்கான செலவினம் முறையே, 0.4 சதவீதம், 6.9 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான செலவினம், 3.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 96,700 கோடி டாலராகவும், தொலைதொடர்புக்கான செலவினம், 0.7 சதவீதம் உயர்ந்து 1.63 லட்சம் கோடி டாலராகவும் அதிகரிக்கும் என, கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)