பதிவு செய்த நாள்
07 ஜூலை2014
00:33
புதுடில்லி:சர்வதேச நாடுகளின், தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்கான செலவினம், நடப்பாண்டில், 2.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.70 லட்சம் கோடி டாலராக(222 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இது, முந்தைய மதிப்பீட்டில், 3.2 சதவீதம் வளர்ச்சி காணும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. கடும் போட்டியால் ஏற்படும் விலை இறக்கம், சந்தையில் அதிகளவில் மாற்று தொழில்நுட்ப தயாரிப்புகள் கிடைப்பது போன்றவற்றால், நிறுவனங்களின் ஐ.டி., செலவினம் கணிசமாக குறையும்.
இருப்பினும், வரும் 2015ம் ஆண்டில், சர்வதேச ஐ.டி., செலவினம், 3.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.88 லட்சம் கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பாண்டில், ஒட்டு மொத்த ஐ.டி., செலவினத் தில், கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்லெட், பிரின்டர் உள்ளிட்ட சாதனங்களுக்காக செலவிடப்படும் தொகை, 1.2 சதவீதம் உயர்ந்து, 68,500 கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தரவு மையங்கள் (14 ஆயிரம் கோடி டாலர்) மற்றும் மென்பொருள் (32,100 கோடி டாலர்) ஆகியவற்றிற்கான செலவினம் முறையே, 0.4 சதவீதம், 6.9 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான செலவினம், 3.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 96,700 கோடி டாலராகவும், தொலைதொடர்புக்கான செலவினம், 0.7 சதவீதம் உயர்ந்து 1.63 லட்சம் கோடி டாலராகவும் அதிகரிக்கும் என, கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|