அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறதுஅலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.01 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.01 ...
இந்தியா– வங்கதேசம் இடையே கப்பல் போக்குவரத்து: வர்த்தகம் பெருகும்; ஏற்றுமதி செலவு குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
00:40

புதுடில்லி:இந்தியா – வங்கதேசம் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகம்:தற்போது,இந்தியா–வங்க தேசம் இடையே, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம், ஆண்டுக்கு,600 கோடி டாலர் (36,000 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, பரஸ்பர வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட இரு வழிகளை விட, கப்பல் மூலம் சரக்குகளை அனுப்பினால், கிட்டத்தட்ட 20–40 சதவீத போக்குவரத்து செலவு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறிய கப்பல்கள் மூலம் வங்கதேசத்தின், சிட்டகாங், மொங்லா மற்றும் பன்கான் துறைமுகங்கள் மற்றும் இந்தியாவின், விசாகப்பட்டினம், ஹால்டியா, பரதீப் துறைமுகங்கள் இடையே, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து செலவை குறைக்க, சிறிய கப்பல்களை பயன்படுத்துவது என, இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. வங்கதேசம், சிறிய கப்பல்களின் தகுதிக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என, இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், இந்திய கப்பல் பதிவாளர் (ஐ.ஆர்.எஸ்.,) நிர்ணயித்துள்ள தர நிர்ணயத்திற்கேற்ப, வங்கதேசம் பயன்படுத்தும் கப்பல்கள் இருக்க வேண்டும் என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.
பேச்சுவார்த்தை:கப்பலின் தரத்திற்கான சர்வதேச விதிமுறைகளை விட,இந்தியாவின் விதிமுறைகள் சற்று எளிமையானவை. இருந்த போதிலும், புதிய கப்பல்களில் முதலீடு செய்வதை விட, தகுதியான பழையகப்பல்களை பயன்படுத்த வங்கதேசம் விரும்புகிறது. இப்பிரச்னை தொடர்பாக, இந்தியா – வங்கதேசம் இடையே, கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில், தற்போது சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.இதையடுத்து, 20 – 25 சிறிய கப்பல்கள், போக்குவரத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, இந்தியா – வங்கதேசம் இடையே, வரும் அக்டோபரில், சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து, இரு தரப்பிலான கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபரில்...முதற்கட்டமாக, இந்தியா – வங்கதேசம் இடையே, வரும் அக்டோபரில், கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, 20 – 25 சிறிய கப்பல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)