பதிவு செய்த நாள்
07 ஜூலை2014
16:46
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் புதிய சாதனை படைத்தன. சென்செக்ஸ் 26 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 7790 புள்ளிகளையும் தாண்டி சாதனை படைத்தன. மோடி அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 138.02 புள்ளிகள் உயர்ந்து 26,100.08-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 35.55 புள்ளிகள் உயர்ந்து 7,787.15-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 26,123.55 புள்ளிகள் வரையும், நிப்டி 7,792 புள்ளிகள் வரையும் சென்றன.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டிசிஎஸ்., விப்ரோ உள்ளிட்ட ஐடி தொடர்பான பங்குகளும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலையும் நன்கு உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|