பதிவு செய்த நாள்
08 ஜூலை2014
00:42
புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், பங்கு விற்பனை மூலம், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக, கிரிசில் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது:மத்திய அரசு, முக்கிய கொள்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு, பங்குச் சந்தையின் எழுச்சி போன்றவற்றால், நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், நிறுவனங்கள், பங்கு விற்பனை மூலம், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 18 மாதங்களில், 21 நிறுவனங்கள், 36 ஒப்பந்தங்கள் வாயிலாக அவற்றின் சொத்துகள் மற்றும் பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளன.
இது, அந்நிறுவனங்களின் மொத்த கடனில், ஐந்தில் ஒரு பங்காகும்.கடந்த மூன்று ஆண்டுகளில், குறிப்பிட்ட, 21 நிறுவனங்களின் கடன், 50 சதவீதம் உயர்ந்து, சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி, 4.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.பொருளாதார மந்தநிலை, வட்டி விகிதம் அதிகரிப்பு போன்றவற்றால், நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வளர்ச்சி, 2 சதவீதம் என்ற அளவிலேயே தேக்கமாக உள்ளது.பங்கு விற்பனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிறுவனங்களில், 60 சதவீதம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகளை சேர்ந்தவை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|