முட்டை விலை 360 காசாக உயர்வுமுட்டை விலை 360 காசாக உயர்வு ... ரூபாய் மதிப்பு 29 காசு சரிவு ரூபாய் மதிப்பு 29 காசு சரிவு ...
பங்கு விற்பனையில் ரூ.60,000 கோடிதிரட்ட இந்திய நிறுவனங்கள் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2014
00:42

புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், பங்கு விற்பனை மூலம், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக, கிரிசில் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது:மத்திய அரசு, முக்கிய கொள்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு, பங்குச் சந்தையின் எழுச்சி போன்றவற்றால், நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், நிறுவனங்கள், பங்கு விற்பனை மூலம், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 18 மாதங்களில், 21 நிறுவனங்கள், 36 ஒப்பந்தங்கள் வாயிலாக அவற்றின் சொத்துகள் மற்றும் பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளன.
இது, அந்நிறுவனங்களின் மொத்த கடனில், ஐந்தில் ஒரு பங்காகும்.கடந்த மூன்று ஆண்டுகளில், குறிப்பிட்ட, 21 நிறுவனங்களின் கடன், 50 சதவீதம் உயர்ந்து, சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி, 4.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.பொருளாதார மந்தநிலை, வட்டி விகிதம் அதிகரிப்பு போன்றவற்றால், நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வளர்ச்சி, 2 சதவீதம் என்ற அளவிலேயே தேக்கமாக உள்ளது.பங்கு விற்பனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிறுவனங்களில், 60 சதவீதம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகளை சேர்ந்தவை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)