பதிவு செய்த நாள்
08 ஜூலை2014
00:43
மும்பை: நடப்பு வாரத்தின் துவக்க நாளான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 29 காசு சரிவடைந்தது. இது, கடந்த மூன்று வாரங்களில் காணப்படாத சரிவாகும்.கடந்த வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 59.72 ஆக இருந்தது. நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 59.82 ஆகக் காணப்பட்டது. இந்த மதிப்பு, வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 59.79 வரையும், குறைந்தபட்சமாக, 60.05 வரையும் சென்றது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, கடந்த வார இறுதியில் இருந்ததை விட, 29 காசு சரிவடைந்து, 60.01ல் நிலை கொண்டது.வரும் வியாழனன்று, மத்திய பட்ஜெட் தாக்கலாகும் வரை, முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடு மேற்கொள்வர். இதனால், அதுவரை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, ஏற்ற, இறக்கமாகவே இருக்கும் என, அன்னியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|