பதிவு செய்த நாள்
08 ஜூலை2014
00:46
மும்பை:பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீடு வரத்தும், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பும் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.இதனால், சாதகமற்ற சர்வதேச சூழலிலும், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’, நேற்று முதன் முறையாக 26 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
பங்கு வர்த்தகத்தின் இறுதியில், 138.02 புள்ளிகள் அதிகரித்து, 26,100.08 புள்ளிகளில் நிலை கொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், இன்போசிஸ், டி.சி.எஸ்., உள்ளிட்ட 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், எச்.டி.எப்.சி., பேங்க், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட ஒன்பது நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 35.55 புள்ளிகள் உயர்ந்து, 7,787.15 புள்ளிகளில் நிலைகொண்டது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை தவிர்த்து, ஏனைய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, 2.63 சதவீதம் அதிகரித்திருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|