பதிவு செய்த நாள்
08 ஜூலை2014
10:30
மும்பை : பங்குசந்தைகளில் நிப்டி இன்று(ஜூலை 8ம் தேதி) ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. முதன்முறையாக நிப்டி 7800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 90.36 புள்ளிகள் உயர்ந்து 26,190.44 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 21.70 புள்ளிகள் உயர்ந்து 7,808.85 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
ஆனால் 10 மணிக்கு மேல் பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்க தொடங்கியதால் சரிவை சந்தித்தன. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 37.35 புள்ளிகள் சரிந்து 26,062.73 புள்ளிகளிலும், நிப்டி 16.14 புள்ளிகள் சரிந்து 7,771 புள்ளிகளும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|