தங்கம் விலை ரூ.32 உயர்வுதங்கம் விலை ரூ.32 உயர்வு ... பரு­வ­மழை பொய்த்­ததுநெற்பயிர் பரப்பு குறைந்­தது பரு­வ­மழை பொய்த்­ததுநெற்பயிர் பரப்பு குறைந்­தது ...
ரயில் கட்டணம் உயராது ; புல்லட் ரயில் அறிவிப்பு ; அந்நிய முதலீடுக்கு நடவடிக்கை - மோடி அரசின் ரயில்வே பட்ஜெட் தாக்கல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2014
15:16

புதுடில்லி : மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், 2014-15-ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சதானந்தா கவுடா இன்று(ஜூலை 8ம் தேதி) தாக்கல் செய்தார். 

அவர் கூறியதாவது, சரக்குகளை கையாள்வதில், உலகளவில் இந்தியன் ரயில்வே தான் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 3700 கி.மீ ரயில் பாதைக்காக ரூ.41 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. 2013-14-ல் ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.12,35,558 கோடியாக இருக்கிறது. இதில் 94 சதவீதம் செலவனமாகியுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை விரைந்து முடிந்து நடவடிக்கை எடுக்கப்படும். 

ரயில் கட்டணத்தை உயர்த்தாமல், வேறு வழிகளில் வருவாயை ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே துறையை மேம்படுத்த தேவைப்படும் பட்சத்தில் அந்நிய முதலீட்டுக்கும் வழிவகுக்கப்படும். பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உள்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்படும். 2013-14-ல் ரயில்வே துறை வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. 
2014-15ம் ஆண்டுக்கான வருவாய் 1,64,374 கோடியாகவும், செலவினம் ரூ.1,49,176 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி தேவைப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில், 674 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அதில் 317 திட்டங்கள் தான் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1,82,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் கிடப்பில் உள்ளது என்றார்.

மேலும் சதானந்த கவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

* ரயில் கட்டணம் உயர்வு இல்லை
* புதிதாக 58 எக்ஸ்பிரஸ் ரயில்கள்
* முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் உணவகம் அமைக்க ஏற்பாடு
* அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் தங்கும் வசதியை மேம்படுத்துதல்.
* ரயில்வே லயன்களை கண்காணிக்க ஸ்டேஷன்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க வசதி.
* போஸ்ட் ஆபிஸ் மற்றும் மொபைல் போன்கள் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு.
* பெண்கள் பாதுகாப்பிற்காக 4 ஆயிரம் பெண் காவலர்கள் நியமனம்.
* சமீபத்தில் உயர்த்தப்பட்ட ரயில்வே கட்டணத்தால், ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8 ஆயிரம் கோடி வருவாய்.
* ரயில் பயணத்தின் போது எஸ்எம்எஸ் மற்றும் போன்கள் மூலம் உணவு கொண்டு வர ஏற்பாடு. மேலும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு. 
* அதிவிரைவு ரயில்களை இயக்க வைர நாற்கர ரயில் பாதை திட்டம் அறிவிப்பு.
* இந்திய ரயில்வேயின் கனவு திட்டமான புல்லட் ரயிலுக்கு அனுமதி. முதற்கட்டமாக மும்பை - அமதாபாத் இடையே அமைக்க ஏற்பாடு.
* குறிப்பிட்ட 9 ரயில் தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ இருந்து 200 கி.மீ-ஆக அதிகரிக்க திட்டம்.
* ஏ-1 மற்றும் ஏ ரயில் நிலையங்களில் வைய்-பை வசதி.
* நிமிடத்தில் 7200 இ-டிக்கெட் எடுக்க வசதி, எதிர்காலத்தில் இதை 1.2 லட்சமாக அதிகரிக்க திட்டம்.
* பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுக்கு ரூ.1,785 கோடி ஒதுக்கீடு.
* சர்வதேச தரத்தில் சில ரயில்நிலையங்களை உயர்த்த நடவடிக்கை.
* சரக்கு ரயில்களுக்கு தனி ரயில் பாதை
* ரயில்வே சுகாதார மையங்களை ஒருங்கிணைக்கும் திட்டம்.
* தனியார் பங்களிப்பு உதவியுடன் தனியார் சரக்கு காப்பகம் மற்றும் சரக்கு முனையம் அமைக்க ஏற்பாடு.
* 18 புதிய ரயில் வழித்தடங்கள் அறிவிப்பு. இதில் 10 திட்டம் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது.
* ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு சுமார் ரூ.20,680 கோடி திட்டத்தில் 29 திட்டங்கள்.
* வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலாக 54 சதவீதம் நிதி ஒதுக்கீடு.
* 2014-15-ம் ஆண்டில் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.93,564 கோடி திரட்ட இலக்கு
*ரயில்வே துறையின் சார்பில், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா கல்வியை தரும் வகையிலான ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)