பதிவு செய்த நாள்
14 ஜூலை2014
00:40
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), 17 அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கியுள்ளன. இந்நிறுவனங்களிடம் இருந்து, 3.75 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் பெறப்பட்டுள்ளது.இதே காலத்தில், எந்த ஒரு அயல்நாட்டு நிறுவனமும், இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், இந்திய வர்த்தகத்தில் களமிறங்கிய, 216 அன்னிய நிறுவனங்கள் மூலம், 36.90 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் பெறப்பட்டது.
இதே காலத்தில், 53 அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் வர்த்தகத்தை கைவிட்டு வெளியேறின.கடந்த 2012 – 13 மற்றும் 2011 – 12ல் இந்தியாவில் பதிவு செய்து கொண்ட அன்னிய நிறுவனங்களின் எண்ணிக்கை முறையே, 165 மற்றும் 231ஆகவும், வெளியேறிய அன்னிய நிறுவனங்கள் முறையே, 102 மற்றும் 85 ஆகவும் இருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|