பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
00:22
புதுடில்லி :சென்ற ஜூனில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் (எம்.எப்.,), வங்கி பங்குகளில், சாதனை அளவாக, 54,746 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இது, அவை நிர்வகித்து வரும் பங்கு முதலீட்டு திட்டங்களின் மொத்த மதிப்பில் (2.55 லட்சம் கோடி ரூபாய்), 21.5 சதவீதமாகும்.முந்தைய மே மாதத்தில், வங்கி பங்குகளில் 48,419 கோடி ரூபாயும், ஜனவரியில், 30,339 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆக, தொடர்ந்து ஐந்து மாதங்களாக, வங்கி பங்குகளில், எம்.எப்.,–ன் முதலீடு பெருகி வருகிறது.வங்கியை அடுத்து, மென் பொருள் (26,595 கோடி ரூபாய்), மருந்து (16,384 கோடி ரூபாய்), நிதி (13,736 கோடி ரூபாய்) ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளில், எம்.எப்.–ன் முதலீடு அதிகரித்துள்ளது.பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு திட்டங்கள் மூலம், முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டி அவற்றை பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|