பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
00:23
புதுடில்லி: வருமான வரி செலுத்துவோர் அனைவரின் மின்னஞ்சல் முகவரிக்கும், வரியை கணக்கிட உதவும் ‘ஆன்–லைன் கால்குலேட்டர்’ அனுப்பும் திட்டத்தை, மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டீ.டி.,), அறிமுகப்படுத்தி உள்ளது.தாக்கல்மின்னஞ்சலில் பெறப்படும் இந்த ‘கால்குலேட்டர்’ மூலம், ஒருவர் தமது வருமானத்திற்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை சுலபமாக கணக்கிட்டு, அதற்கேற்ப, வருமான வரி கணக்கை, இணையம் மூலம் தாக்கல் செய்யலாம்.வருமான வரித் துறையின் www.incometaxindia.gov.in வலைதளத்தில், வரியை கணக்கிடுவதற்கான ‘கால்குலேட்டர்’ உள்ளது. இதை பயன்படுத்தி, ஒருவர் தமது பலதரப்பட்ட வருவாயின் அடிப்படையில், எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப, வருமான வரி கணக்கு படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
ஊக்குவிப்பு:வீடு உள்ளிட்ட சொத்துகள் மீதான வருவாய், மூலதன ஆதாயம், வியாபாரம், தொழில்களில் கிடைக்கும் லாபம், வேளாண் வருமானம் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவுகளின் கீழ், ஒருவர் செலுத்த வேண்டிய வரியை கணக்கிட, ‘ஆன்-–லைன் கால்குலேட்டர்’ உதவும்.வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களில் ஒன்றாக, மேற்கண்ட ‘ஆன்-–லைன் கால்குலேட்டர்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என, வருமான வரி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|