சூரிய மின்தகடுக்கு பொருள் குவிப்பு வரி:மத்திய அரசுடன் மின் நிறுவனங்கள் மோதல்சூரிய மின்தகடுக்கு பொருள் குவிப்பு வரி:மத்திய அரசுடன் மின் நிறுவனங்கள் ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.12 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.12 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மந்த நிலையில் பங்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2014
00:29

மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, லேசான சரிவுடன் முடிவடைந்தது.நாட்டின் பொது பணவீக்கம் குறைந்துள்ளதாக வெளியான செய்தி, முதலீடு களை ஊக்குவிக்காமல், அவற்றை திரும்ப பெறும் சூழலை உருவாக்கி விட்டது. இதற்கு, பருவமழை குறையும் என்ற கணிப்பு, அரசு அதிக அளவில் அன்னிய கடன் பெறும் என்ற தகவல் உள்ளிட்டவற்றை கூறலாம். மேலும், ‘கார்’ எனப்படும் பொது வரி தவிர்ப்பு தடுப்பு சட்டம் குறித்த மத்திய அரசின் விளக்கமும், பங்கு வர்த்தகத்திற்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை.
இதையடுத்து, பங்குச் சந்தைகள், 0.7 சதவீதம் சரிவைகண்டன.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், மின்சாரம், மோட்டார் வாகனம், பொறியியல், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’, வர்த்தகம் முடியும் போது, 17.37 புள்ளிகள் குறைந்து, 25,006.98 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இன்போசிஸ், எச்.யு.எல்., உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 5.45 புள்ளிகள் குறைந்து, 7,454.15 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)