பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
00:29
மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, லேசான சரிவுடன் முடிவடைந்தது.நாட்டின் பொது பணவீக்கம் குறைந்துள்ளதாக வெளியான செய்தி, முதலீடு களை ஊக்குவிக்காமல், அவற்றை திரும்ப பெறும் சூழலை உருவாக்கி விட்டது. இதற்கு, பருவமழை குறையும் என்ற கணிப்பு, அரசு அதிக அளவில் அன்னிய கடன் பெறும் என்ற தகவல் உள்ளிட்டவற்றை கூறலாம். மேலும், ‘கார்’ எனப்படும் பொது வரி தவிர்ப்பு தடுப்பு சட்டம் குறித்த மத்திய அரசின் விளக்கமும், பங்கு வர்த்தகத்திற்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை.
இதையடுத்து, பங்குச் சந்தைகள், 0.7 சதவீதம் சரிவைகண்டன.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், மின்சாரம், மோட்டார் வாகனம், பொறியியல், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’, வர்த்தகம் முடியும் போது, 17.37 புள்ளிகள் குறைந்து, 25,006.98 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இன்போசிஸ், எச்.யு.எல்., உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 5.45 புள்ளிகள் குறைந்து, 7,454.15 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|