பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
17:26
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக சரிவில் இருந்த பங்குசந்தைகள் பணவீக்கத்தால் உயர்வு கண்டன. ஜூன் மாதத்திற்கான பொது பணவீக்கம்(5.43 சதவீதம்), மற்றும் சில்லரை வர்த்தக பணவீக்கம்(7.31 சதவீதம்) குறைந்ததன் எதிரொலியாக பங்குசந்தைகள் காலைமுதலே ஏற்றம் கண்டன. மேலும் பணவீக்கம் குறைந்ததால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க ஏற்றத்திலேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 221.67 புள்ளிகள் உயர்ந்து 25,228.65-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 72.50 புள்ளிகள் உயர்ந்து 7,526.65-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பெல்(4.31), எஸ்.பி.ஐ., (4.43), எல்அண்ட்டி(2.21), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா(2.59), ஆக்சிஸ்(2.89), கோல் இந்தியா(1.52), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(1.20), ஐசிஐசிஐ.,(3.33), டாடா ஸ்டீல்(2.92) உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. அதேசமயம் ஐடி தொடர்பான பங்குகள் விலை சரிவில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|