பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
23:50
மும்பை:கடந்த ஐந்து வர்த்தக தினங்களாக சரிவை கண்டு வந்த பங்குச் சந்தை, நேற்று எழுச்சி கண்டது.
சென்ற ஜூன் மாதம், மொத்தம் மற்றும் சில்லரை விலை அடிப்படையிலான பண வீக்கம் குறைந்ததால், ரிசர்வ் வங்கி, அடுத்த மாதம் வெளியிட உள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதன் எதிரொலியாக, சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்ததையடுத்து, ‘சென்செக்ஸ் மற்றும் ‘நிப்டி முறையே, 0.89 சதவீதம் மற்றும் 0.97 சதவீதம் அதிகரித்தன.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, பொறியியல் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தன.
அதேசமயம், நுகர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 221.67 புள்ளிகள் அதிகரித்து, 25,228.65 புள்ளிகளில் நிலைபெற்றது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எஸ்.பீ.ஐ., பெல் உள்ளிட்ட 18 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாக்டர் ரெட்டீஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா பவர் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 72.50 புள்ளிகள் உயர்ந்து, 7,526.65 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|