பதிவு செய்த நாள்
16 ஜூலை2014
00:00
புதுடில்லி:மத்திய அரசு, ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. வரும் மாதங்களில் வெங்காயம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெங்காயம் இறக்குமதி மூலம், உள்நாட்டு தேவையை சமாளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சேமிப்பு:பருவ மழை தாமதம் காரணமாக, வெங்காயம் அதிகம் விளையும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில், கரீப் சாகுபடி ஒரு மாதம் தள்ளிப் போயுள்ளது. இதன் விளைவாக, சந்தையில் வெங்காயம் வரத்து குறைந்து, செப்., – அக்., மாதங்களில் அதன் விலை அதிகரிக்கும் என, தெரிகிறது.இதை தடுக்கும் நோக்குடன், மலேசியா அல்லது ஈரான் நாட்டில் இருந்து, ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதிசெய்யப்பட உள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூலை – செப்., வரையிலான காலத்தில், வெங்காயத்திற்கான தேவை அதிகரிப்பால், அதன் விலை உயர்வது வழக்கம். அப்போது, கோடையில் உற்பத்தியாகி, கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெங்காயம், தேவையை சமாளிக்க பயன்படுத்தப்படும். இதனால், வெங்காயம் விலையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.
பாதிப்பு:ஆனால், நடப்பாண்டு மார்ச்சில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த ஆலங்கட்டி மழையால், கோடை பருவ வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், வரும் வாரங்களில், சந்தையில் வெங்காயம் வரத்து குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதை சமாளிக்க, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
மத்திய அரசு, ஏற்கனவே, வெங்காயம் மீதான ஏற்றுமதி விலையை, டன்னுக்கு 500 டாலராக உயர்த்தியுள்ளது. இதனால், வெங்காயம் ஏற்றுமதி குறைந்து, உள்நாட்டு தேவை ஓரளவு சமாளிக்க முடியும் என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|