பதிவு செய்த நாள்
16 ஜூலை2014
23:54
மும்பை: சாதகமான சர்வதேச நிலவரங்கள் மற்றும் சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது போன்றவற்றால், நேற்றைய பங்கு வர்த்தகம், காளையின் ஆதிக்கத்தில் இருந்தது.
தளர்வு: ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம், குறைந்த விலை வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான, நிதியுதவி விதிமுறைகளை தளர்த்தியது. இதுவும், முதலீட்டாளர் களின் நம்பிக்கையை அதிகரித்து, பங்கு வியாபாரத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்தது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, மற்றும் உலோக துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் முறையே, 4.28 சதவீதம், 2.50 சதவீதம் மற்றும் 2.20 சதவீதம் அதிகரித்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 321.07 புள்ளிகள் அதிகரித்து, 25,549.72 புள்ளிகளில் நிலைகொண்டது.‘நிப்டி’‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 25 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும், கெயில், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 97.75 புள்ளிகள் உயர்ந்து, 7,624.40 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|