பதிவு செய்த நாள்
18 ஜூலை2014
23:25
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், இந்தியா – சீனா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தெரிவித்தார்.
வர்த்தக பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர, இந்தியாவின் தொழிற் பூங்காக்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில், சீனாவின் முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது போன்ற நடவடிக்கைகளால், ஏற்றுமதி அதிகரித்து, சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சீனாவிற்கு, இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைகளை ஏற்றுமதி செய்வதில், பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும், வர்த்தக பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாமல் உள்ளது என, அமைச்சர் மேலும் கூறினார்.
சென்ற 2013–14ம் நிதியாண்டில், சீனா உடனான வர்த்தக பற்றாக்குறை, 3,622 கோடி டாலராக (2.17 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|