பதிவு செய்த நாள்
19 ஜூலை2014
14:35
விலை உயர்ந்த அலைபேசிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த "வயர்லெஸ் சார்ஜிங்' தொழில்நுட்பத்தை மூலமாக கொண்டு, வாகன யுகத்தில் புது புரட்சியை ஏற்படுத்த போராடி வருகின்றன... முன்னணி கார் நிறுவனங்கள்!
உயர்ந்துக்கொண்டு போகும் பெட்ரோல் விலை, புகையால் ஏற்படும் இயற்கை மா”பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பம், முற்றிலும் இயற்கைக்கு கை கொடுப்பதுடன் மின்சார வாகன ஓட்டிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை மற்றும் பருவகாலங்களில், தற்போது நடைமுறையில் இருக்கும் மின்சார கார்களுக்கான "சார்ஜிங்' தொழில்நுட்பத்தை கையாளும் போது ஏற்படும் மின் பாதிப்புகளில் இருந்து, இந்த புதுதொழில்நுட்பம் முற்றிலும் பாதுகாப்பு அளிக்கும் என்பதுடன், உபயோகிப்பதற்கும் எளிதாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் இந்த "வயர்லெஸ் சார்ஜிங்' தொழில்நுட்பத்தை தயாரிப்பதில் போட்டிப்போட்டு வருகின்றன.
வாகனத்தில் அடிப்பாகத்தில் உள்ள மின்தகட்டிற்கும், தரையில் உள்ள மின் தகட்டிற்கும் இடையில் ஏற்படும் காந்தசக்தியால், மின் பறிமாற்றம் நடைபெற்று, வாகனத்தின் பேட்டரி "சார்ஜ்' செய்யப்படுகிறது. இந்த முறையில், வாகனத்தை சரியான முறையில் "பார்க்' செய்தால் மட்டுமே "சார்ஜ்' செய்ய முடியும்; மின் பறிமாற்றத்தால் ஏற்படும் காந்த சக்தியால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகள்... என சில பிரச்சினைகள் இருந்தாலும், அது மனிதனையும், இயற்கையையும் பெருமளவு பாதிக்காது என்பதால் இந்த "வயர்லெஸ் சார்ஜிங்' முறை, அனைவர் மத்தியிலும் இந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|