பதிவு செய்த நாள்
20 ஜூலை2014
00:41

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 3,840 கோடி ரூபாய் (64 கோடி டாலர்) அதிகரித்து, 19.02 லட்சம் கோடி ரூபாயாக (31,703 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 3,687 கோடி ரூபாய் (61.46 கோடி டாலர்) உயர்ந்து, 18.98 லட்சம் கோடி ரூபாயாக (31,639 கோடி டாலர்) இருந்தது.ஒட்டுமொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில், அதிக பங்களிப்பை கொண்டு ள்ள, அன்னிய செலாவணி சொத்து மதிப்பு, கணக்கீட்டு வாரத்தில், 64.87 கோடி டாலர் அதிகரித்து, 29,022 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு மாற்றம் எதுவுமின்றி, 2,063 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 40 லட்சம் டாலர் சரிவடைந்து, 446 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 15 லட்சம் டாலர் குறைந்து, 171 கோடி டாலராகவும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|