பதிவு செய்த நாள்
20 ஜூலை2014
00:42
புதுடில்லி:‘பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு அமைச்சகங்கள், அலுவலகங்கள் ஆகியவை அவற்றுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவையில், 20 சதவீதத்தை, குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறுவது, 2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார்.
கடந்த, 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல், குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான, பொது கொள்முதல் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அடுத்தாண்டு ஏப்ரல் முதல், பொது துறை நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், அலுவலகங்கள் ஆகியவை, குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 20 சதவீதம் பொருட்களை வாங்குவது கட்டாயமாகிறது என, அமைச்சர் மேலும் கூறினார்.
கடந்த, 2011 – 12ம் ஆண்டில், பொதுத் துறை நிறுவனங்கள் – அலுவலகங்கள் – அமைச்சகங்கள், 14,442 கோடி ரூபாய்க்கு, குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து, பொருட்கள் மற்றும் சேவையை பெற்றுள்ளன. இது, 2012 – 13 மற்றும் 2013 – 14ம் நிதியாண்டுகளில் முறையே, 12,931 கோடி ரூபாய் மற்றும் 3,799 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.இதையடுத்தே, மேற்கண்ட நடைமுறையை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|