பதிவு செய்த நாள்
21 ஜூலை2014
17:06
மும்பை : இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் முதல்நாளில் ஏற்றத்துடன் முடிந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி., உள்ளிட்ட நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையில் அந்நிறுவனங்களின் லாபம் அதிகரித்தால், அது தொடர்பான பங்குகள் விலை ஏற்றம் கண்டதாலும், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 73.61 புள்ளிகள் உயர்ந்து 25,715.17-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 20.30 புள்ளிகள் உயர்ந்து 7,683.20-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி., நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன. இவைகள் தவிர்த்து ஆக்சிஸ், ஐசிஐசிஐ., கோல் இந்தியா, டாக்டர் ரெட்டி, இந்துஸ்தான், ஐடிசி., சன் பார்மா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி, டிசிஎஸ்., போன்ற நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|